மகாத்மா காந்திஜி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நேரம் அது. திண்டுக்கல்லில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்குக் செல்வது என்றபடி காந்திஜியின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
காந்திஜியைக் கண்ணாறக் கண்டு நேரில் அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையோடு அந்த வட்டாரத்து மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களது ஆசை நிறைவேரும் தருணம் இப்போது வந்து விட்டது.
திண்டுக்கல் நகரில் கூட்டத்தை முடித்து விட்டு ரயிலில் பழனி நகரை நோக்கி காந்திஜி வரும் போது ஒட்டன்சத்திரம் ஏன்ற ஊர் வழியாகத் தானே வரவேண்டும்? அந்த ரயிலை ஒட்டன்சத்திரதில் நிறுத்தி மகாத்மாவை நேரில் கண்டுவிடலாம் என ஒட்டன் சத்திரத்து வட்டார மக்கள் சொல்லவொணா கொள்ளை ஆசையோடு இருந்தனர்.
ஆனால் காந்திஜியின் பயண்த்திட்டத்தின்படி, அவர் ஏறிப்புறப்பட்டு வரும் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்காது. நேராகப் பழனி நகருக்குச் செல்ல வேண்டும் என்பதே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணத் திட்டமாகும்.
இந்த அறிவிப்பை ஏற்கனவே கேட்டறிந்த மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தபோதிலும் மனதில் நம்பிக்கையைச் சுமந்தவாறே ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல்த் தொடங்கின்ர்.
தாராபுரத்து நாயகனாக விளங்கிய வடிவேலு அவர்களும் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரத்துக்குப் போனார்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்த காங்கிரஸ் கமிட்டியினர் வடிவேலு அவர்களைச் சந்தித்து, அய்யா இந்த பகுதி மக்கள் அனைவரும் மகாத்மாவை நேரில் காண வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அவர் செல்லும் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்வதற்குத் தாங்கள் எப்படியாவது ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டன்ர்.
ரயில் பாதை அருகில் உள்ள திடலில் பெரிய கூட்டத்தைக் கூட்டுங்கள் நான் ரயிலை நிறுத்துகிறேன் என்று கூறிய வடிவேல் அவர்கள் மறுவார்த்தை பேசவில்லை. மக்களை திரட்ட அனைவரும் பம்பரம் போலச் சுழன்று அசுரவேகத்தில் செயல்படத் தொடங்கினர்.
திண்டுக்கல் நகரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைதியையும் கட்டுப்பாட்டையும் மகாத்மா காந்திஜியினால் காண முடியவில்லை. கூட்டத்தில் கூச்சல் ஏற்பட்ட காரணத்தினால் மகாத்மா அதிக நேரம் பேசாமல் சீக்கிரமே தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
திண்டுக்கல் நகரிலிருந்து ரயில் பழனி நகரை நோக்கிப் புறப்பட்டு வந்தது. ஒட்டன்சத்திரத்தில் காந்திஜியைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.
திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பாத்து, வடிவேலு அவர்கள், அன்புடையீர் நமது மகாத்மா அவர்கள் அமைதியையும் கட்டுப்பாட்டையும் பெரிதும் விரும்புவார். நீங்கள் அமைதியாக இருப்பீர்களானால் இங்கே ரயிலை நிறுத்தி மகாத்மாவை நேரில் பார்க்கலாம் என்று உரக்கப் பேசினார்.
ரயில் ஒட்டன்சத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பெருங்கூட்டத்தைக் கண்ட ரயில் வேகத்தைக் குறைத்தது.
திண்டுக்கல் கூட்ட அனுபவத்தின் காரணமாக, ரயிலை நிறுத்தாதீர்கள், கை மட்டும் அசைப்பேன் என்று காந்திஜி கண்டிப்புடன் கூறியிருந்தார். ஒட்டன்சத்திரத்துக் கூட்டத்துக்கும் இது பொருந்தத் தானே செய்யும்?
ரயில் மிகமிகக் குறைந்த வேகத்தோடு ஒட்டன்சத்திரத்தை நெருங்கியபோது, அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்த, மகாத்மாவுடன் பயண்ம் மேற்கொண்டிருந்த ராஜாஜி அவர்கள், ரயில் ஜன்னலை மெல்லத் திற்ந்து இங்கே புரோகிராம் இல்லையே என்று தலையை வெளியே நீட்டியபடி கூட்டத்தின்ரைப் பார்த்துச் சொன்னார்.
இதற்க்கிடையே மகாத்மா வெளியே எட்டிப் பார்த்தார். மக்கள்திரள் அவரது கண்களில் தென்பட்டது. உடனே ரயிலை நிறுத்தும்படி காந்திஜி உத்திரவிட்டார். ரயில் நின்றது.
ரயிலின் கதவை இணைத்தபடி அங்கே பெரிய மேடை ஒன்று போடப்பட்டது. கூட்டத்தைக் கண்ட மகாத்மாவுக்கு சந்தோஷம் ஒரு பக்கம் வியப்பு இன்னொரு பக்கம்.
மேடையில் நின்ற்படி கூட்டத்தினரைப் பார்த்து சில வார்த்தைகள் பேசிய காந்திஜி இறுதியாக, என் பொதுவாழ்வில் இன்று வரை இது போன்ற அமைதியான கட்டுப்பாடு மிக்க கூட்டத்தை நான் பார்த்ததில்லை. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரைப் போல் ஊருக்கு 100 பேர் இருந்தால் இந்தியாவிற்க்கு சுதந்திரம் உடனே பெற்றுவிட முடியும் என்று கூறிவிட்டு, மக்களை பார்த்துக் கையசைத்தபடி விடைபெற்றுச் சென்றார்.
தங்கள் வாழ்நாளில் மகாத்மாவை எப்படியெனும் ஒருமுறை நேரில் காணவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மக்கள், தங்களது ஆர்வம் பூர்த்தியாகி விட்ட முழுமன நிறைவோடு தங்களது வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன்ர்.
இந்த சம்பவத்தைப் பற்றி அடுத்த நாளில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஒட்டன்சத்திரத்தில் மகாத்மா கல்ந்து கொண்டு பேசிய மாபெரும் கூட்டத்தில் பெரியவர்கள் சத்தமின்றி இருந்தது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் குழந்தைகள் கூட ஒசையின்றி இருந்தது மிகமிக அதிசயம் என்று பத்திரிக்கைகள் பாராட்டி எழுதியிருந்தன.
கட்டுப்பாடும் அமைதியும் மிக்க இத்தகைய சிறப்பானதொரு கூட்டத்தை அணிதிரட்டியதில் வடிவேலு அவர்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. ஊருக்கு நூரு பேர் தேவை என்ற கூறிய காந்திஜியின் வாக்கு வடிவேலு அவர்களுக்கு அப்படியே பொருந்தும் என்றே கூறவேண்டும்.