ஒன்றுபட்டிருந்த கோவை மாவட்டத்தில் தாராபுரம் என்பது பழம் பெருமை உடைய ஊர். இவ்வூருக்கு விராடபுரம் என்ற பெயர் உண்டு. விராட நாட்டின் தலைநகராக இந்த ஊர் இருந்தது என்பர். கொங்கு மண்டல சதகம் இந்த ஊரை காந்தபுரம் ஏன்று குறிப்பிடுகின்றது, தாராகபுரி, குந்தலை விண்ணகரம், ஸ்காந்தபுரம் ஆகிய பெயர்களும் இவ்வூருக்கு வழங்கி வந்திருக்கின்றன. தலைகாட்டு கங்கர்கள் இங்கு ஆட்சி புரிந்து வந்தனர். ரோமாபுரி நாணயங்கள் இங்கு அகப்பட்டுள்ளன. வெளியுலகத் தொடர்பில் இந்த ஊர் முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு இதுவே சாட்சி எனலாம்.
இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளுரில் இருந்த பட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கிக் கிடந்தது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் கொளுந்து விட்டெரிந்த நேரத்தில் எந்த விதமான சலனமுமின்றி மெளன பூமியாக இருந்த ஒரே பகுதி தான் இந்த தாராபுரம். இந்த ஊரில் அந்த நிலையில் 1930 ஆண்டு வாக்கில் இந்திய சுதந்திரப் போராட்டச் சுடரை ஒருவர் அவ்வூருக்கு ஏந்தி வந்தார். அதன் பின்னர் அந்த ஊர் போராட்டக்களத்தின் குவி மையம் ஆகிவிட்டது.
பாலக்காட்டை ஒட்டிய ஒலவக்கோட்டில் பா.நா. துரைசாமிபிள்ளை என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுந்தரம்மாள் என்பதாகும். அணுகுமுறை, வாக்குதவறாமை, நேர்மை ஆகிய காரணங்களால் பா.நா. துரைசாமிபிள்ளை அவர்கள், தான் நடத்தி வந்த மர வியாபாரத் தொழிலில் பெரிய மனிதர் என்ற நிலையைப் பெற்றிருந்தார். இந்த சீரும் சிறப்பும் பெற்ற குடும்பத்தில் தன்னலன் மறந்து பிறர்நலன் காக்கச்சீறிப்பாயும் புலி ஒன்று உருவானதில் பலருக்கும் ஆச்சரியம்.
பின்னூட்டமொன்றை இடுக